சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் பாஜக நிர்வாகி பொய் சொல்லி ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது. அதாவது தனக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது அங்கு கூட செல்லாமல் உங்களை பார்க்க வந்துள்ளேன் என்று பாஜக நிர்வாகி கூற, அதற்கு பிரதமர் உடனே சென்று குழந்தைகளை பார் என அறிவுறுத்தினார். இந்த நிலையில் அந்த நபர் பிரதமரிடம் பொய் சொல்லி ஏமாற்றியதும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவானதும் தெரிய வந்துள்ளது.