திருவனந்தபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை எழும்பூரில் ஏப்ரல் நான்காம் தேதி இன்று காலை 9.45 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் எர்ணாகுளம் மற்றும் குருவாயூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

மறு மார்க்கமாக குருவாயூரிலிருந்து ஏப்ரல் ஐந்தாம் தேதி நாளை இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயில் குருவாயூரிலிருந்து புறப்படுவதற்கு பதிலாக எர்ணாகுளத்தில் இருந்து ஏப்ரல் ஆறாம் தேதி அதிகாலை 1.20 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.