தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று இறந்த நிலையில் குப்பை தொட்டியில் கிடந்துள்ளது. மேலும் அந்த குழந்தையின் பாதி உடலை நாய்கள் சாப்பிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து இறந்த குழந்தையை குப்பையில் போட்டு சென்றது யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.