இன்று 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தேசிய தொடர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டு இருந்த நிலையில் பலர் தங்கள் கைகளில் தேசியக் கொடியுடன் வந்திருந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ரசிகர்கள் வைத்திருந்த கொடியை பறிமுதல் செய்தனர்.

அதன்படி உதவி ஆய்வாளரான நாகராஜன் ரசிகர் ஒருவரிடம் இருந்து தேசிய கொடியை வாங்கி குப்பை தொட்டியில் போட முயன்றுள்ளார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் துறை ரீதியான நடவடிக்கை உதவி ஆய்வாளர் மீது எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேசியக் கொடியை குப்பை தொட்டியில் போட முயன்ற உதவி ஆய்வாளரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி மாநகர காவல் ஆணையர்  உத்தரவு வெளியிட்டுள்ளார்.