கௌதமி புகார் அளித்த அழகப்பனுக்கும்  பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கவுதமி கட்சியிலிருந்து வெளியேறினாலும் பாஜக அவருக்கு உறுதுணையாக இருக்கும் என்று அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். அழகப்பன் மீது காவல்துறையை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என தெரியவில்லை எனவும் அண்ணாமலை கூறியுள்ளார். கவுதமி அளித்த புகார் மீது வழக்கில் போலீஸ் நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.