PM KISHAN திட்டத்தில் சேர்ந்த விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடத்திற்கும் நான்கு மாதத்திற்கு 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம்  ஒவ்வொரு வருடமும் மூன்று தவணைகளாக பிரித்துக் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் 16வது தவணை பணமானது கடந்த பிப்ரவரி மாதம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

தற்போது 17வது தவணை எப்போது கிடைக்கும் என விவசாய பயனாளிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அது குறித்த தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது 17வது தவணை மே கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  விவசாயிகள் தவணைகளை தொடர்ந்து பெற KYC முறைகளை கட்டாயம் முடிப்பது அவசியம். அப்படி செய்யாதவர்கள் உடனே செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.