தமிழகத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை போன்ற பொருட்களுக்கு தடை விதித்த உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் உணவு பாதுகாப்பு சட்டத்தில் புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

அதன் பிறகு உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தில் புகையிலைப் பொருட்களுக்கு முழு தடை விதிக்கவில்லை என்று கூறிய நீதிபதிகள் உணவு பாதுகாப்பு துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று கூறினர். மேலும் தடை உத்தரவை மீறியதாக எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.