தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததால் இந்த தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்கு சேகரிப்பதற்காக அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகின்றார். அவரை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

அதில் குடும்பத் தலைவிகளுக்கான ஒரு மகிழ்ச்சி செய்தியை அவர் வெளியிட்டுள்ளார். அதாவது தமிழக முதல்வர் அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கான மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் குறித்து வருகின்ற மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.