இந்தியாவில் மக்கள் பலரும் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இதனால் பயணிகளில் வசதிக்கு ஏற்ப ரயில்வே நிர்வாகம் ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது ஏழுமலையான் கோவிலை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு அருமையான டூர் பேக்கேஜ் ஒன்றை ஐ ஆர் சி டி சி அறிவித்துள்ளது. இதில் திருப்பதி கோவில், பத்மாவதி கோவில் மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி போன்ற கோவில்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

இந்த சுற்றுலா பேக்கேஜ் டெல்லி விமான நிலையத்தில் இருந்து தொடங்கி ஒரு இரவு மற்றும் இரண்டு பகல் பயணம் செய்யலாம். குடும்பம் அல்லது நண்பர்களுடன் திருப்பதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல் ஒருவர் மட்டுமே பயணிப்போருக்கு டூர் பேக்கேஜ் கட்டணம் 21913 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நண்பர்களுடன் கூட்டமாக செல்லும்போது உங்களுக்கான கட்டணம் குறையும் என ரயில்வே நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.