டெல்லி அரசங்கம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை மது விற்பனை தடை செய்யப்படும் நாட்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஜூலை 1-ந்தேதி முதல் செப்டம்பர் 31-ந்தேதி வரை டெல்லியில் மது விற்பனை தடை செய்யப்படும் நாட்கள் குறித்த அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.

அதாவதுபண்டிகை தினத்தையொட்டி டெல்லியில் 4 நாட்கள் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொகரம் பண்டிகை (ஜூலை 29), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), கிருஷ்ண ஜெயந்தி (செப்டம்பர் 7) மற்றும் மிலாடி நபி (செப்டம்பர் 28) ஆகிய 4 நாட்கள் டெல்லியில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது