மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான குடிநீரைப் பருகியதால் பகீரத்புரா பகுதியில் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தூய்மையான நகரமாகத் தொடர்ந்து பலமுறை விருது பெற்ற இந்தூரில், கழிவுநீர் கலந்த குடிநீரால் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பாக வெளிவந்த ஒரு வைரல் வீடியோவில், இந்தூர் மாநகராட்சி ஊழியர் ஒருவர் குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பும் போது, அந்தத் தண்ணீர் ‘குடிப்பதற்கு உகந்ததல்ல’ என்ற எச்சரிக்கை வாசகம் கொண்ட லாரியிலிருந்து நீரை எடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த அலட்சியமான செயல் பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Indore Municipal water tanker carrying warning ‘this water is unfit for drinking’, used to refill mud pots for public#IndoreNews #MadhyaPradesh #MPNews pic.twitter.com/sd5XDjTBCM
— Free Press Madhya Pradesh (@FreePressMP) January 2, 2026
“>
இந்தக் குடிநீர் விநியோகக் குழாய்களில் கழிவுநீர் கசிவு ஏற்பட்டு கலந்ததே மரணங்களுக்குக் காரணம் என்று முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
சுகாதாரத் துறையினர் ஆயிரக்கணக்கான வீடுகளில் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், இந்தச் சம்பவத்திற்குக் காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நகரின் தூய்மைப் பெருமையை விட பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதை இந்தத் துயரச் சம்பவம் உணர்த்தியுள்ளது.
