குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து அம் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு குஜராத்தின் நவ் சாரி நகரில் உள்ள எரிவாயு கிடங்குக்குள் வெள்ள நீர் புகுந்தது.

வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால், குடோனில் இருந்த சிலிண்டர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இன்னும் சில பகுதிகளில் ஏராளமான கார்கள், கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகியுள்ளது.