கோவை மாவட்டத்தை சேர்ந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி முரளி ஆவார். கோவையிலுள்ள வட வள்ளியில் வேம்பு அவென்யூ பகுதியில் தனியார் அபார்ட்மென்ட் இருக்கிறது. இங்கே பெயிண்ட் அடிக்கும் பணியில் முரளி ஈடுபட்டிருந்தபோது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இவரை பணிக்கு அழைத்து வந்தவர்கள் யார் என தெரியாத சூழலில், சிலர் உயிரிழந்த பெயிண்டரை தூக்கி அபார்ட்மென்ட்க்கு வெளியில் உள்ள சாலையில் சேர் போட்டு அமரவைத்து போர்வையை போர்த்தியுள்ளனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாகியும் இறந்தவர் உடல் என்ன ஆனது? என்பது குறித்து அபார்ட்மென்ட்டில் வசிக்கும் யாரும் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. இதுகுறித்த புகைப்படம் வெளியாகி காண்போரின் நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது.