சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்படுவதால் இதனை ரசிப்பதற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதன்படி தற்போது இணையத்தில் ஒரு குரங்கின் வீடியோ வைரலாகி வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றது போல ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் என பல சமூக ஊடக பயன்பாடுகள் இணைந்துள்ளனர். அதனைப் போலவே சில விலங்குகளும் மனிதனைப் போலவே அதனை பின்பற்ற தொடங்கி விட்டன. அதாவது ஒரு குரங்கு ஒரு அலுவலகத்தில் அமர்ந்து மும்முரமாக கணினியில் வேலை பார்க்கிறது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.