நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைக்கு என்றும் தனி தனி சிறப்புகள் இருக்கிறது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் என தனித்தனியா பண்டிகைகளும் கொண்டாடப்படுகிறது. ஆனால் எத்தனை பண்டிகை இருந்தாலும் குழந்தைகள் குதூகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக  கிருஷ்ண ஜெயந்தி விளங்குகிறது. தேசிய அளவில் எல்லா மாநிலங்களிலும் உள்ள எல்லா மொழி பேசுபவர்களும் கொண்டாடும் ஒரு பண்டிகையாக கிருஷ்ண ஜெயந்தி விளங்குகிறது.

இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு  இன்று  பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, இன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாலை நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறும். பல இடங்களில் உறியடி உற்சவம், வழுக்கு மரம் ஏறுதல், கோ பூஜை கோலாகலமாக நடைபெறும்