தேசிய அளவில் எல்லா மாநிலங்களிலும் உள்ள அனைத்து மொழி பேசுபவர்களும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாக கிருஷ்ண ஜெயந்தி விளங்குகிறது. இந்த விழாவை முன்னிட்டு இன்று செப்டம்பர் ஆறாம் தேதி தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி இன்று பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாலை நேரத்தில் சிறப்பு வழிபாடு கோலாலமாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.