ஒடிசாவை சேர்ந்த 22 வயது மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான ராஜஸ்ரீ ஸ்வைன் புதுச்சேரியில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான போட்டிக்காக ஒடிசா கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். ஆனால் புதுச்சேரி செல்லும் அணியின் இறுதி பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதனால்  அழுது கொண்டிருந்த அவர் அதன் பின் மாயமாகியுள்ளார்.

இவரை போலீசார் தேடி வந்த நிலையில் குரதிஜதியா வனப்பகுதியில் ராஜஸ்ரீ தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இந்நிலையில்அவர் எழுதி வைத்ததாக கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் பயிற்சியாளர் மற்றும் ஒடிசா கிரிக்கெட் கூட்டமைப்பின் முன்னாள் அதிகாரி ஒருவர்தான் தனது மரணத்திற்கு காரணம் என எழுதியுள்ளார். எனினும் இது தங்கள் மகளின் கையெழுத்தில்லை என அவரது பெற்றோர் மறுத்துள்ளனர்.