இந்திய ஆடவர் அணி சமீபத்தில் ஐசிசி உலககோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி தழுவியது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா நாளை முதல் பங்கேற்க உள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஓவர்களுக்கு நடுவே அணிகள் எடுக்கும் நேரத்தை கட்டுப்படுத்துவதற்கு கடிகாரம் பயன்படுத்தப்படும் என்றும் ஒருவேளை பவுலிங் செய்யும் அணி ஒரு ஓவர் முடிந்த பிறகு அடுத்த ஓவரை 60 வினாடிகளுக்குள் வீச தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிகழ்வு மூன்றாவது முறையாக தொடர்ந்தால் எதிரணிக்கு 5 ரன்கள் போனஸ் ஆக வழங்கப்படும் என்றும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.