கேரளாவிலிருந்து நேபாளம் வரை ஒரே ஒரு சக்கரத்தைக் கொண்ட மிதிவண்டியில் பயணிக்கும் ஒரு சிறுவனின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தச் சிறுவன் தனது மிதிவண்டியின் முன்பகுதியை மேலே உயர்த்தி, பின் சக்கரத்தை மட்டும் தரையில் படும்படி வைத்து, மிகவும் நேர்த்தியாகவும் சமநிலையுடனும் பயணிக்கும் காட்சிகள் பார்ப்போரை ஆச்சரியப்படுத்துகின்றன.

இந்நிலையில் தனது பயணத்திற்குத் தேவையான சாமான்களை வண்டியில் சுமந்து கொண்டு, எவ்வித தடுமாற்றமுமின்றி பொதுச் சாலைகளில் அவன் செல்வது, அவனது அதீத திறமையையும் மன உறுதியையும் பறைசாற்றுகிறது.

“>

இந்தச் சாகசப் பயணத்தைப் பார்க்கும் பலரும், சாதாரண மிதிவண்டியையே ஓட்டத் தடுமாறும் நிலையில், இவ்வளவு நீண்ட தூரத்தை ஒரே சக்கரத்தில் கடக்கும் அவனது துணிச்சலைப் பாராட்டி வருகின்றனர். “வாழ்க்கையையே சரியாகச் சமன் செய்ய மக்கள் சிரமப்படும்போது, இந்தச் சிறுவன் ஒரு சக்கரத்தில் பயணத்தையே சமன் செய்கிறான்” என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், இவ்வளவு ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும்போது அவன் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று சமூக வலைதளப் பயனர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். எது எப்படியிருப்பினும், அவனது விடாமுயற்சியும், புதுமையான கனவுகளைத் துரத்தும் உணர்வும் பல இளைஞர்களுக்குப் பெரும் உத்வேகமாக அமைந்துள்ளது.