இந்திய ராணுவத்திற்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் காஷ்மீரில் கடந்த வியாழக்கிழமை அன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு தொழில்நுட்ப பணியாளர் இறந்தார். அதோடு இரண்டு விமானிகள் காயமடைந்தனர். இச்சம்பவத்தை அடுத்து ராணுவத்தின் அனைத்து துருவ் ஹெலிகாப்டர்களும் பறக்காமல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

துருவ் ஹெலிகாப்டர்களில் ஏற்பட்ட இதுபோன்ற 2 விபத்துகளால், இந்திய கடற்படையும் கடலோர காவல்படையும் ஏற்கனவே கடந்த மார்ச் முதல் இந்த ஹெலிகாப்டர்களை இயக்காமல் நிறுத்திவைத்தது. அதில் முழுமையாக தொழில்நுட்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பரிசோதனை முடிந்த ஹெலிகாப்டர்கள் மட்டும்தான் இப்போது இயக்கப்பட்டு வருகிறது. இந்திய விமான படையில் சுமார் 70 துருவ் ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த இலகுரக ஹெலிகாப்டர், மத்திய அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தால் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.