தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், சிதம்பரத்தில் 6ஆம் தேதி திமுக மற்றும் கர்நாடக அரசை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஈபிஎஸ் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் குருவை சாகுபடிக்கு போதிய நீரை பெற்று தர நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்தும், காவிரி விவகாரத்தில் தமிழக மற்றும் கர்நாடக அரசை கண்டித்து  தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ் மணியன், சி. விஜயபாஸ்கர், ஆர் பி உதயகுமார் உள்ளிட்டோர் தலைமையில் போராட்டம் நடைபெற உள்ளது. காவிரி நீரை பெற்று தர தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெறவுள்ளது.