தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி ஏப்.17ம் தேதிகாலை6 மணி முதல் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் காரணமாக பள்ளித் தேர்வுகளும் முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.