கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி, டெட்ரா பேக் திட்டம், 90 எம்எல் திட்டம் இன்னும் ஆய்வில் தான் உள்ளது. அந்த திட்டங்கள் வந்தாலும் வரலாம். வராமலும் போகலாம். தமிழகத்தில் இந்த அரசை பொருத்தவரை 7 மணிக்கு டாஸ்மாக் கடையை திறக்கும் எண்ணம் இல்லவே இல்லை. குடிப்பவர்களை குடிகாரர்கள் என கூறுவதை விட்டு அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குங்கள். காலையில் மது குடிப்பவர்களை குடிகாரன் என்று சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.