ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அரியானாவில் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களின் மாதிரிகளைப் பிரித்து ஆய்வு செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

“>

 

உயிரிழந்தவர்களில் தடயவியல் குழுவினர் மற்றும் காவல் துறையினர் அடங்குவர். இந்தச் சம்பவத்தில் காவல் நிலையத்தில் பணியில் இருந்த மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.

“>

 

இவர்களில் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த பலத்த வெடி விபத்தினால் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் முற்றிலும் சேதமடைந்தன.