
திருப்பத்தூர் மாவட்டம் கிரிசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாசம். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் இன்று தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பயணிகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கிரி சமுத்திரம் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார்.
அப்போது சாலையில் கிடந்த பையை எடுத்து திறந்து பார்த்ததில் ஏடிஎம் கார்டுகள் 19 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அந்த பணத்தை வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் பேபிடம் ஒப்படைத்தார்.
இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பணம் பாப்பன பள்ளி பகுதியைச் சேர்ந்த நிரோஷா என்பவருக்கு சொந்தமானது என்பது உறுதியானது. அவர் கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக தங்க நகையை அடகு வைத்து 19 ஆயிரம் ரூபாய் பணத்தை பையில் வைத்துக்கொண்டு ஸ்கூட்டியில் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பையை தவறவிட்டது தெரியவந்தது. இதனால் போலீசார் நிரோஷாவை வரவழைத்து அவரிடம் பையை ஒப்படைத்தனர். நேர்மையாக செயல்பட்டு பணத்தை ஒப்படைத்து ஆட்டோ டிரைவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.