பொதுவாகவே நம்முடைய முன்னோர்கள் எந்த ஒரு காரணமும் இல்லாமல் எதையும் சொல்லி வைக்கவில்லை. அவர்கள் ஒவ்வொரு செயலுக்கும் துல்லியமான அறிவியல் காரணம் இருக்கும். அந்த வகையில் கலாச்சாரத்தில் பெண்கள், குழந்தைகள் அனைவரும் காலையில் வெள்ளி கொலுசு அணியும்  பழக்கம் பழங்காலத்தில் இருந்து வருகிறது. எப்போதும் தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழர்கள் காலில் அணியும் கொலுசு வெளியில் தான் அணிய வேண்டும் என்ற  காரணம் என்ன தெரியுமா?  காலில் அணியும் ஆபரணம் தங்கத்தில் இருப்பது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

ஆனால் வெள்ளி காலில் அணிந்தால் பல்வேறு மருத்துவ பலன்கள் கிடைக்கிறது. அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்ட உண்மை. வெள்ளி கொலுசு அணிவதால் பாதங்களை அழகாக்கும். பெண்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் ஹார்மோன் சமநிலமையின்மையால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை, குழந்தையின்மை, கால் வலி என பல்வேறு உடலில் பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம். ஆனால் பெண்கள் வெள்ளி கொலுசு அணிவதால் இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

வெள்ளி அணிவதால் குளிர்ச்சி தரும். இதனால் உடல் வெப்பநிலை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.   உண்மையில் வெள்ளி கொலுசு அணிவதால்  எலும்புகள் வலுவடையும். வெள்ளி கொலுசு கால்களை தொடும்பொழுது இந்த உலோக உறுப்பு தோலில்ஊடுருவி  எலும்புகளை வலுப்படுத்துகிறது.