செந்தில் பாலாஜி வழக்கில் தினமும் ஆதாரம் அழிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புகார் அளித்துள்ளது..

செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதற்கு எதிராகவும், செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பாக மேல்முறையீடு என்பது செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அமலாக்கத்துறை சார்பாக ஜெனரல் துஷார் மேத்தா  ஆஜராகி தனது வாதங்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றார்.. கடுமையான குற்றச்சாட்டுகளை செந்தில் பாலாஜி தரப்புக்கு எதிராக அவர் முன்வைத்து வருகிறார்.. செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பதால்  அவரை எங்களால் தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியவில்லை.

அதே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகள் அனைத்தும் நிலுவையில் இருப்பதாலும் எங்களால் விசாரணையை தொடர முடியவில்லை. எனவே எங்களது கடமையை செய்ய முடியாத சூழலில் நாங்கள் இருக்கிறோம் என்ற விஷயத்தை அமலாக்கதுறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் செந்தில் பாலாஜி செல்வாக்கு மிக்க நபராக இருக்கிறார். அவரிடம் விசாரணையை தாமதப்படுத்த தாமதப்படுத்த விசாரணை என்பது நீர்த்து போகும். ஏற்கனவே ஆதார அழிப்பு என்பது தினமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த சூழலில் இப்படியானவரிடம் தாங்கள் விசாரணையை  தாமதப்படுத்தும் போது இன்னும் விசாரணையை மோசமானதாக ஆக்கிவிடும் என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்துள்ளது..

இந்த அவதாரத்தில் காலம் தாழ்த்தவே கூடாது, காலம் தாழ்த்தும் ஒவ்வொரு மணித்துளியும் வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் என அமலாக்கத்துறை சார்பாக தனது வாதங்களாக கூறியிருக்கிறார். இதை வாதம் என்பதை சொல்வதை விட செந்தில் பாலாஜிக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுகள் என்ற விஷயமாகவும் எடுத்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் செந்தில் பாலாஜி ஏற்கனவே ரிமாண்ட் செய்யப்பட்டு விட்டார். அப்படி இருக்கும்போது விசாரணைக்காக கைது செய்யப்பட்டு, ரிமாண்ட் செய்யப்பட்ட பிறகு  ஆட்கொணர்வு மனு தாக்கல் என்பது சட்டப்பூர்வமானதே இல்லை..

எனவே ஆட்கொணர்வு மனு சட்ட கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் தான் விடை காண வேண்டுமே தவிர, சென்னை உயர்நீதிமன்றம் தலையிட வேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய மாறுபட்ட தீர்ப்பை அவர் தகவலாக உச்சநீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்.. அது மட்டும் இல்லாமல் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞராக கபில் சிபல் அவர்கள் வாதங்களை முன்வைத்து வருகிறார். 3வது நீதிபதி முடிவுக்காக வழக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.. எனவே அந்த ஒரு முடிவை தெரிந்து கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிடக்கூடாது எனவும், எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்பதாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் மூத்த வழக்கறிஞர் சிபில் வாதத்தை முன்வைத்து வருகிறார்..

சென்னை உயர்நீதி மன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. 3வது நீதிபதிக்காக தற்போது அனுப்பப்பட்டுள்ளது அப்படி இருக்கும்போது இந்த நேரத்தில் உச்சநீதிமன்றம் இதில் தலையிடக்கூடாது என வழக்கை ஒத்திவைத்து விட்டு இறுதி தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என முக்கியமான தகவலை சொல்லியுள்ளார்.. மற்றொரு மூத்த வழக்கறிஞர் முகில் ரோத்தகி, தற்போது செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருக்கிறார். மறுபுறம் விசாரணை நடத்த முடியாது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டு தீர்ப்பு வருவதற்குள் அமலாக்கத்துறை ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்கள் என்ற கேள்வியும் எழுப்பி உள்ளார் மொத்தத்தில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்கள் அந்த குற்றச்சாட்டுகளை கடுமையான முறையில் மறுத்திருக்கிறார்கள் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் வழக்கின் வாதத்தை பிரதிவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது..