தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகர் பகுதியான ஹிமாயத் சாகர் என்ற இடத்தில் கார் மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று வயது  குழந்தை உயிரிழந்ததுடன் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் ஒருவரின் நிலைமை மோசமாக இருப்பதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.