ஈரானில் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனிக்கு எதிரான போராட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் வன்முறையாக வெடித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, போராட்டக்காரர்களை விரட்டிச் சென்ற போலீஸ் அதிகாரி ஒருவர், துரதிர்ஷ்டவசமாக சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் கார் துரத்தலின் போது நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், அந்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. போராட்டக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருவதால், நாட்டின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கின்றன.
#فوری
ویدئو لحظه ترور محمود حقیقت فرمانده پاسگاه ایرانشهر و فرمانده سابق حفاظت اطلاعات🔴 مزدوران رژیم ببینند چه عاقبتی در انتظار آنهاست اگر دست از حمایت از این رژیم جنایتکار برندارند !#اعتراضات_سراسری pic.twitter.com/jvm2LYsSyj
— 𝘼𝙨𝙝𝙠𝙊𝙛𝙄𝙧𝙖𝙣 (@AshkOfIran) January 7, 2026
“>
இந்த ஆட்சி மாற்றத்தை வலியுறுத்தி மக்கள் நடத்தி வரும் இந்தப் போராட்டம், தற்போது ஆயுதமேந்திய மோதலாக உருவெடுத்துள்ளது சர்வதேச சமூகத்தை கவலையடையச் செய்துள்ளது. போராட்டங்களை ஒடுக்க ஈரானிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் போதிலும், போராட்டக்காரர்கள் பின்வாங்குவதாகத் தெரியவில்லை.
இது குறிப்பாக, பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்து நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்கள், அங்கு நிலவும் ஆத்திரத்தையும் அதிருப்தியையும் காட்டுகின்றன. வன்முறை மேலும் தீவிரமடைந்து வருவதால், ஈரானின் எதிர்காலம் குறித்த கேள்விக்குறி எழுந்துள்ளதோடு, உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
