நாளை (நவ.26) கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ தற்போது 1500 – 1800 வரை விற்பனை செய்யப்படுகிறது. கனகாம்பரம் ரூ.1000, முல்லை பூ ரூ.1300, ஜாதி மல்லி ரூ.800 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.