தேசத்தந்தை மகாத்மா காந்தியை அவமதிக்கும் வகையில் பேசவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார். 1942 ஆம் ஆண்டுக்குப் பிறகு மகாத்மா காந்தியின் போராட்டங்கள் பலனளிக்கவில்லை என ஆளுநர் சர்ச்சை கருத்து ஒன்றை கூறியிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் இதுகுறித்தான விளக்க அறிக்கை ஒன்றை ஆளுநர் வெளியிட்டுள்ளார்.

அதில், தேசத்தந்தை மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை‌. காந்தியை நான் பெரிதும் மதிக்கிறேன். அவரது போதனைகள் என் வாழ்க்கைக்கு ஒளியாக இருந்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.