கோவை மாவட்டத்தில்  17 வயதான சிறுமி வசித்து வருகிறார். இவர் ஒரு துணி கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி துணிகடைக்கு வேலைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. பின் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிறுமி முன்பு வேலை பார்த்துக் கொண்டிருந்த துணி கடையின் உரிமையாளரின் மகனான முகமது அயாஸ் (23) என்பவரை காதலித்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரையும் காணவில்லை என்பதால் தனிப்படை அமைத்து 10 நாட்களாக வலை வீசி தேடி வந்தனர். பின் அந்த சிறுமியை அந்த வாலிபர் காஷ்மீருக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

உடனடியாக காவல்துறையினர் காஷ்மீருக்கு சென்று அச்சிறுமியை மீட்டனர். பின் இருவரையும் விமானம் மூலம் கோவைக்கு அழைத்து வந்தனர். அதன் பிறகு மகளிர் காவல்துறையினரிடம் அவர்களை  ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அந்த சிறுமியை காதலித்ததாக கூறினார். அதோடு திருமணம் செய்து கொள்ளாமல் பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.