சமூக வலைதளங்களில் ஒரு வேடிக்கையான வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. ஓர் பரபரப்பான கடை வீதியில் திடீரென பூகம்ப அதிர்வு ஏற்படுகிறது. இதனால் அங்கு கடைவீதி பரபரப்பாகிறது; பொதுமக்கள் அலறியடித்து ஓடுகின்றனர்.
ஆனால், அருகில் உள்ள ஒரு கடையில் நாற்காலியில் அமர்ந்து தனது காதலியுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த ஒரு இளைஞன் மட்டும் சிறிதும் கலக்கமடையவில்லை.
பூகம்பத்தால் அனைத்தும் ஆடுவதைத் தெளிவாகக் காண முடிந்தாலும், இந்த ‘ஆஷிக்’ (காதலன்) நாற்காலியை விட்டு எழுந்து ஓடவில்லை.
<a href=”http://
View this post on Instagram
“>
முகத்தில் பயத்தின் அறிகுறி எதுவுமின்றி தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கும் இவனது ‘உறுதி’யைக் கண்ட நெட்டிசன்கள் பலரும், “காதல் இப்படிப்பட்ட தைரியத்தைக் கொடுக்கும்” என்றும், “உண்மையான விசுவாசம் இதுதான்” என்றும் பல்வேறு விதமான கமென்ட்களைப் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
