காதலுக்கு நான் எதிர்ப்பே கிடையாது, எனது 2 பிள்ளைகளும் காதல் திருமணம்தான் செய்துகொண்டார்கள் என CM ஸ்டாலின் பெருமிதம் கூறியுள்ளார். தொகுப்பாளர் கோபிநாத் உடனான பேட்டியில், உதயநிதியா? செந்தாமரையா? யாரை ரொம்ப பிடிக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த CM, எனக்கு 2 பேரும் 2 கண்கள்தான். எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை. இருவருமே காதல் திருமணம்தான் செய்துகொண்டார்கள்.முதலில் என்னிடம்தான் வந்து சொன்னார்கள் பிறகு மனைவியுடன் கலந்து பேசி பார்த்து விசாரித்து இருவரது திருமணத்தையும் நடத்தினோம்… இப்போது அவர்கள் சந்தோசமாக உள்ளார்கள்.

படிக்கும்போது அரட்டை அடித்துக்கொண்டு சுற்றி வந்தேன். திருமணம் நடத்த உடனே மிசா சட்டத்தில் கைது. அதன் பிறகு அரசியல் என அனைத்தும் வேகமாக சென்று விட்டது. எங்க குடும்பத்தில் எல்லாருக்கும் சீக்கிரமாகவே திருமணம் நடந்துவிடும். எனக்கு 22 வயதில் திருமணம் நடந்தது.. அரசியல் குடும்பம் என்பதால் வரன் அவ்வளவு எளிதாக அமையவில்லை என்று கூறியுள்ளார்.