நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. எனவே இந்த நாளில் காதலர்கள் தங்களுடைய காதலர் அல்லது காதலிக்கு ரோஜா பூவை கொடுப்பது வழக்கம். இந்நிலையில் இவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு பூக்கள் சந்தையில் ரோஜா பூக்களின் விலை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

குறிப்பாக, தோவாளை மலர் சந்தையில் ஸ்டெம் ரோஜாக்களின் ஒரு கட்டு 150ல் இருந்து 550க்கு உயர்ந்துள்ளது. இதனால், ஒரு ஸ்டெம்ப் ரோஜாவின் விலை 10ல் இருந்து 35க்கு விற்கப்படுகிறது. நாளை(பிப்.,14) காதலர் தினம் என்பதால், ரோஜா பூக்களின் இந்த விலை ஏற்றம் காதலர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.