சட்லஜ் நதியில் மாயமான தனது மகன் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார். ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட தகவலை அருகில் உள்ள பழங்குடியின மக்களுக்கு தெரிவிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்லஜ் நதியில் விழுந்த காரில் இருந்து காணாமல் போன சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தேடும் பணி 3ஆவது நாளாக தொடர்கிறது. பனிப்பொழிவு காரணமாக தேடும் பணியில் சிக்கல் நிலவுகிறது.