இந்தியாவில் ஒரு சிறுவன் தன் குடும்பத்தினரிடம் சொல்லாமல் திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல மணி நேரமாகத் தேடியும் அவன் கிடைக்காததால், பதற்றமடைந்த குடும்பத்தினர் கிராமம் முழுவதும் தேடி அலைந்தனர்.

இறுதியில், அங்கிருந்த ஒரு குளத்தின் அருகே சென்றபோது, சிறுவன் தண்ணீருக்குள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அலறியடித்தபடி அவனை வெளியே இழுத்தனர்.

ஆனால், அவன் நீரில் மூழ்கவில்லை என்பதும், அந்த வெயிலுக்கு இதமாக குளத்திற்குள் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான் என்பதும் தெரிந்த பிறகுதான் குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

“>

 

அந்தச் சிறுவனின் இந்த விசித்திரமான செயல் அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது.