உலகப்பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளில் ஒன்று 3ஆம் படை வீடான பழனி தண்டாயுதபாணி கோவில். இங்கு  நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி முருகனை தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மலைக்கோவில் பாதுகாப்பு பேரவையின் ஆலோசனை கூட்டம், அடிவாரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில், பழனி முருகன் கோவில், அதன் உபகோவில்களில் “இந்துக்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்” என்று அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். காசி, ராமேசுவரம் போன்று பழனியை புனித நகராக அறிவிக்க வேண்டும், பக்தர்களை பாதிக்கும் தரிசன கட்டண வசூல் முறையை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.