தேர்தலில் இனி மேல் போட்டியிட மாட்டேன் என்று திருச்சூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் முரளிதரன் தடாலடியாக அறிவித்துள்ளார். அந்த தொகுதியில் பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். முரளிதரன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் பூகம்பம் வெடித்த நிலையில் மூத்த நிர்வாகிகள் பதவி விலக வேண்டும் என கேரளா இளைஞர் காங்கிரஸார் போர்க்கொடி  தூக்கி உள்ளனர்.