தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில் அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸுக்கு மொத்தம் 4 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். அதில் 3 பேர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். கடந்த வாரம் 2 எம்.எல்.ஏ.,க்கள் பாஜகவில் இணைந்த நிலையில், நேற்று சட்டசபைக்குழு தலைவராக இருந்த லம்போ தையெங்கும் அக்கட்சியில் இணைந்துள்ளார்.