ஒரு பெண் தனது கணவனை ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது பெண் ஒருவர் தனது கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை கண்டுபிடித்துள்ளார். இருவரும் தனியாக இருந்தபோது, ​​கையும் களவுமாக பிடிபட்டனர். இதனை அடுத்து ரூ.5 லட்சம் கொடுத்து தன் கணவரை எடுத்துக் கொள்ளுமாறு அவரது மனைவி கூறினார். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.