
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தனது மூன்று வயது மகனைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி, தனது கணவர் உறவினர் வீட்டு திருமண விழாவிற்கு சென்ற போது இளம்பெண் தனது கள்ளகாதலனுடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை தனது மூன்று வயது மகன் பார்த்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் தனது குழந்தையை மொட்டை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார்.
ஆனால், தவறுதலாக குழந்தை விழுந்ததாக கணவரை நம்ப வைத்துள்ளார். அன்றிலிருந்து தினமும் அப்பெண்ணுக்கு கனவுகளில் மகன் வந்ததால் பயந்து தனது கணவனிடம் நடந்ததை கூறியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பெண்ணையும் அவரது காதலரையும் கைது செய்துள்ளனர்.