கணவன் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டிருக்க, இங்கே மனைவி காதலனுடன் ஓட்டல் அறையில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவியின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவும், குடும்பத்தை முன்னேற்றவும் கணவன் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். ஆனால், கணவனின் கஷ்டத்தை மதிக்காத அந்த பெண், யாருக்கும் தெரியாமல் வேறொரு நபருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், தனது மருமகள் மீது சந்தேகம் அடைந்த மாமியார், அவரை ரகசியமாக பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

​அப்போது, அந்தப் பெண் தனது காதலனுடன் ஒரு தனியார் ஓட்டல் அறைக்குச் சென்றதை மாமியார் கவனித்துள்ளார். உடனே ஆவேசமடைந்த அவர், அந்த அறைக்குள் புகுந்து மருமகளையும் அவரது காதலனையும் கையும் களவுமாகப் பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளார். “மகன் அங்கே ரத்தம் சிந்தி உழைத்துக் கொண்டிருக்க, நீ இங்கே இப்படி உல்லாசமாக இருக்கிறாயா?” என்று மாமியார் ஆக்ரோஷமாகக் கேட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.