தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் வெளியூர் செல்லவும் முக்கிய இடங்களில் அதிக அளவு கூடுவதால் அவர்களின் நலனை கருதி சென்னை பெருநகர காவல் துறை சார்பாக பல்வேறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களாக உள்ள பல இடங்களில் காவல்துறை சார்பாக பல்வேறு சிறப்பு பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு இடத்திலும் மக்களின் பாதுகாப்பை கருதி மொத்தம் சென்னையில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.