தமிழகத்தில் கல்வித்துறை அதிகாரிகள் 5 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குனர் பூபதி பள்ளி கல்வி இயக்கக துணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வி இயக்கக இணை இயக்குனர் பணியிடத்திற்கு முழு கூடுதல் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளர் ஞான கௌரிக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத் துணை இயக்குனர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனராக அய்யனன் நியமிக்கப்பட்டுள்ளார். அதனைப் போலவே பெட்ரோல் ஆசிரியர் கழகத்தின் செயலாளர் ஆக அஞ்சுலோ நியமிக்கப்பட்ட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.