நாகை மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 2022 -2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைகான விளையாட்டு போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முதற்கட்டமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் பிரிவிலும் அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவிலும் பல்வேறு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நேற்று முதல் தொடங்கியது. இதில் வாலிபால், இறகுப்பந்து, கூடைப்பந்து, தடகளம், கபடி போன்ற பல்வேறு போட்டிகள் ஆண்கள், பெண்கள் என தனித்தனி பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த கல்லூரிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் 20-ற்கும் மேற்பட்ட அரசு தனியார் கல்லூரிகளில் இருந்து 2000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டி… 2,000 பேர் பங்கேற்பு…!!!!
Related Posts
சாலையோர உணவகங்களில் பூனைக்கறி…. ரூ.100 மட்டுமே… அதிர்ச்சி….!!!
சென்னையில் சாலையோர உணவகங்களுக்கு விற்பதற்காக பூனைகள் வேட்டையாடப்படுவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் ஜோஸ்வா கூறும் போது, கீழ்ப்பாக்கம் பகுதியில் சிலர் இரவு நேரத்தில் பூனைகளைப் பிடித்து செல்வதாகவும் அவர்களை விசாரித்த போது 100 ரூபாய்க்கு…
Read moreஎப்படில்லாம் ஏமாத்துறாங்கப்பா… ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நூதன மோசடி…. முன்னாள் வங்கி ஊழியர் கைது…!!!
சென்னை சூளைமேடு பகுதியில் கார்த்திக் வேந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டதாகவும் அதை வைத்து யாரோ ஒருவர் பணத்தை திருடுவதாகவும் கூறி இருந்தார்.…
Read more