நாகை மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 2022 -2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைகான விளையாட்டு போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முதற்கட்டமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் பிரிவிலும் அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவிலும் பல்வேறு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நேற்று முதல் தொடங்கியது. இதில் வாலிபால், இறகுப்பந்து, கூடைப்பந்து, தடகளம், கபடி போன்ற பல்வேறு போட்டிகள் ஆண்கள், பெண்கள் என தனித்தனி பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த கல்லூரிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் 20-ற்கும் மேற்பட்ட அரசு தனியார் கல்லூரிகளில் இருந்து 2000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.