தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் இன்று  முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலமாக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில் விண்ணப்பிக்க விடுபட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்ப தலைவிகள் மற்றும் தகுதி வாய்ந்த மகளிர்கள் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே நடைபெற்ற முகாம்களில் பதிவு செய்ய இயலாத குடும்ப தலைவிகள் மூன்று நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.