சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்படவுள்ள “முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னத்திற்கு” 15 நிபந்தனைகளுடன் தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்திற்கு(CRZ) அனுமதி வழங்கி இருக்கிறது.

இந்நிலையில் பேனா நினைவுச் சின்ன கட்டுமான பணிகள் ஐஐடி நிபுணர்களின் உதவியோடு விரைவில் தொடங்க இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 3 மாதங்களில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு ஒன்றரை ஆண்டுக்குள் பேனா நினைவு சின்னத்தை கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி இருக்கிறது.