தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கோட்டம் திறப்பு விழா ஜூன் 15ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வாக கலைஞர் கோட்டம் திறப்பு விழா மற்றும் மாநாடு நடைபெற உள்ளது. இந்த விழாவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்களும் அகில இந்திய தலைவர்களும் உரையாற்ற இருக்கின்றனர். தாயாலு அம்மாள் அறக்கட்டளை சார்பில் இந்த கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.