கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் “கர்நாடகா தேர்தலில் எங்களால் பெரும்பான்மையை பெற முடியவில்லை. முழுமையான முடிவுகள் வந்தவுடன் தோல்விக்கான காரணத்தை ஆராய்வோம். கர்நாடக தேர்தல் முடிவை எங்கள் முன்னேற்றத்திற்காக எடுத்துக்கொள்வோம் என்று அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.